Thursday, April 22, 2010

ATM சிக்கல்

====================================
அட்டையை உள்ளே அனுப்பினேன்!சென்றது!
பெட்டித் திரைவிவரம் பூர்த்திசெய்து காத்திருந்தேன்!
அட்டையும் வந்தது!நோட்டுருளும் சத்தத்தை
அக்கறையாய்க் கேட்டேன்! பணம்வர வில்லையே!
பெட்டிக்குள் சிக்கியது! ஓடினேன் வங்கிக்கு!
பட்பட் பதற்றமுடன் சொன்னேன் கணக்கரிடம்!
சட்டென்று பார்த்தார்! இயன்ஹ்திரக் கோளாறுதான்!
சற்றே பொறுத்தருள்க ! இன்றுபோய் நாளைவா!
நற்றமிழில் சொன்னார் சிரித்து.

மதுரை பாபாராஜ்

1 Comments:

Blogger cheena (சீனா) said...

அன்பின் பாபாராஜ்

சில தவிர்க்க இயலாத தொழில் நுட்பக் காரணங்கள் - வாடிக்கையாளர்களைப் படுத்துகிறது - என்ன செய்வது

8:25 PM

 

Post a Comment

<< Home