Sunday, April 11, 2010

நெப்போலியன் அஞ்சிய பூனை!

சின்ன சின்ன பூனையாம்!
சிலிர்த்து நிற்கும் பூனையாம்!
மீசைக் கார பூனையாம்!
மியாவ்! மியாவ்! பூனையாம்!

பாலைக் குடிக்கும் பூனையாம்!
காலைச் சுற்றும் பூனையாம்!
நாயைக் கண்டால் நடுங்கித்தான்
பாய்ந்தே ஓடும் பூனையாம்!

எலியைப் பிடிக்கும் பூனையாம்!
எங்கள் செல்லப் பூனையாம்!
இருட்டில் பூனைக் கண்களோ
ஆயிரம் வாட்ஸ் பல்புதான்!

அறைக்குள் பூனை வந்துவிட்டால்
அலறித் துடிப்பார் நெப்போலியன்!
அறையை விட்டே அகன்றதும்
அமைதி ஆவார் நெப்போலியன்!

பகைவர் அஞ்சும் நெப்போலியன்
அஞ்சி நடுங்கும் பூனையாம்!

-- மதுரை பாபாராஜ்
1, முதல் குறுக்குத் தெரு
கணேஷ்நகர் டெலிபோன் காலனி
ஆதம்பாக்கம் - சென்னை --600 088
கைபேசி:900 3260 981

0 Comments:

Post a Comment

<< Home