Saturday, April 10, 2010

குறுந்தொகைக் காட்சிகள்

204. விருந்தே காமம்
மிளைப்பெருங் கந்தன்
பாடல்:'காமம் காமம் 'என்ப;காமம்
==============================================
எதிரில் வருவோரைப் பேரழகால் கவ்விக்
கதிகலங்கச் செய்யும் அணங்கல்ல காமம் !
புதிராகப் படரும் பிணியுமல்ல காமம்!
முதிராத புல்லைக் கிழட்டுப் பசுவோ
தடவித் தடவியே நாவால் சுவைத்தே
அகத்திலே இன்புறும் தன்மையைக் கொண்ட
புதியதோர் இன்ப உணர்ச்சியாம் அஃது !
அறிவாய் தலைவா உணர்ந்து.

0 Comments:

Post a Comment

<< Home