Friday, April 09, 2010

பெற்றோர் அரவணைப்பே செல்வம்!

--------------------------------------------------------------------
குழந்தையின் ஏக்கம் உணராமல் பெற்றோர்
சுழலும் பணிக்களத்தில் நாளும் புகழின்
ஒளிமகுடம் தன்னைத் தரித்துத் திளைக்கும்
களிப்பு களிப்பல்ல இங்கு.

குழந்தைக் கருகில் இருக்கும் பருவம்
விலகி இருந்தால் குழந்தை வளர்ந்து
விலகும் பருவத்தில் எண்ணத்தால் கூட
உரச முடியாது பார்.

பெற்றோர் அரவணைப்பைத் தள்ளிவைத்துக் கோடிகோடி
வற்றாத செல்வத்தை வாரி வழங்கினாலும்
பெற்றோர் அரவணைப்புச் செல்வத்தின் முன்னால்
மற்றவை தூசாகும் இங்கு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home