Friday, June 25, 2010

வாங்கும் சக்தியின் இடைவெளியை நீக்கு!

===========================================
தனிமனிதன் இங்கே பொருள்வாங்கும் சக்தி
கணிசமாய் நாளும் இடைவெளி கண்டால்
கனியாது தாயே! சமத்துவ வாழ்வு!
கனியவைக்கும் திட்டத்தைத் தீட்டு.

தனியார் நிறுவனத்தின் சம்பளமும் நாட்டின்
இமையாம் மற்றவையின் சம்பளமும் என்றும்
இணையாமல் மாபெரும் வேறுபாட்டில் நின்றால்
மனைதோறும் நிம்மதி ஏது?

சொத்துக்கள் தம்மை மலைபோல் குவிக்கின்ற
வக்கிரத்தைச் சட்ட விதிகளின் வாயிலாக
அக்கறை கொண்டேதான் கட்டுப் படுத்தவேண்டும்!
தப்பாமல் செய்யவேண்டும் சாற்று.

நாளுக்கு நாளிங்கே பேதங்கள் கூடினால்
ஊழ்வினை என்றுரைத்தே காலம் கடத்துவதோ?
வாழ்வில் வறுமை நிலையின்றி வாழவேண்டும்!
வாழவைக்க வேண்டும் அரசு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home