Wednesday, July 28, 2010

இனப்பற்று!

===================
காகம் தெருவில் இறந்து கிடந்தது!
காகங்கள் ஏங்கிப் பறந்து கரைந்தன!
தேடுகின்ற அந்தப் பறவைகள் கூடிநின்று
வாடுகின்ற கோலத்தைப் பார்.

மனிதன் தெருவில் இறந்து கிடந்தான்!
மனித இனமோ ஒதுங்கி நடந்தது!
இனப்பற்றில் காகம் உயர்ந்து பறக்க
மனிதனோ தாழ்ந்தான் நடந்து.

0 Comments:

Post a Comment

<< Home