Monday, July 26, 2010

பனிப்போர்!

================
குழந்தை பிறக்கும் வரையிலே ஒன்றாய்க்
குலவி மகிழ்வோர் அவரவர்க் கென்று
குழந்தை பிறந்ததும் கண்ணோட்டம் மாறும்
களத்திலே நிற்பதேன்? சாற்று!

எப்பொழுது பிள்ளைகள் எப்படிச் சண்டையைத்
தத்தெடுப்பார்? என்றே தெரியாது! தப்பாகத்
தத்தெடுக்கும் போது சமாதானம் செய்துவிட்டே
அப்புறத்தில் நிற்கவேண்டும் அங்கு.

என்பிள்ளை என்றென்றும் நல்லவன்தான் ஆனாலும்
உன்பிள்ளை இப்படியா செய்வதென்றே பெற்றோர்கள்
தங்களுக்குள் நாளும் பனிப்போர் தொடங்கிவிட்டால்
என்றுதான் நிம்மதி?கூறு.

0 Comments:

Post a Comment

<< Home