Friday, May 06, 2011

போர்க்குற்றவாளி ராஜபட்சே !

================================
போர்க்குற்றம் செய்தவர் ராஜபட்சே என்றேதான்
ஆய்வறிக்கை தந்தது பன்னாட்டு மன்றந்தான்!
போர்க்களத்தில் தத்தளித்த அப்பாவி மக்கள்மேல்
ஈவிரக்கம் இல்லாமல் குண்டுமழை பெய்தேதான்
ஆயிரம் ஆயிரம் மக்களைக் கொன்றுவிட்டார்!
பாவியாக மாறியதைப் பார்.

இலங்கை அரசுக்கோ இந்தியா தோழன்!
கலக்கம் தருகிறதே இத்தகைய கொள்கை!
தயங்காமல் நீதியைக் காக்காமல் இன்றும்
மயங்குவதின் பின்னணியைக் கூறு.

உலக அரசெல்லாம் கண்டிக்கும் காட்சி!
இலங்கை இனக்கொலைக்கு இந்தியாவா சாட்சி?
இலங்கையை இந்தியா கண்டித்தல் வேண்டும்!
தயக்கத்தில் தூங்குவதேன் சாற்று?

இக்கட்சி அக்கட்சி என்பதைத் தூக்கியெறி!
எக்கட்சி ஆனபோதும் இங்கே இனமான
ஒற்றுமையை ஏந்தி இனக்கொலையைக் கண்டிக்க
வெற்றி முரசொலிக்க வா.

குற்றவாளிக் கூண்டிலே ராஜபட்சே நிற்கவேண்டும்!
குற்றம் புரிந்ததற்கு மன்னிப்பு கேட்கவேண்டும்!
மட்டமான சிந்தனைக்கு தண்டனை ஏற்கவேண்டும்!
அத்தகைய நாள்வருமா கூறு?

மதுரை பாபாராஜ்

1 Comments:

Blogger agaramamuthan said...

அருமையான வெண்பாக்கள். வாழ்க

9:07 PM

 

Post a Comment

<< Home