Saturday, May 07, 2011

கடவுளே தேடிவருவார்

=========================
குடும்பமென்னும் கோயில் நிலைகுலையும் போது
கடவுளைத் தேடியே கோயிலுக்குச் சென்றால்
கடவுள் சிரிப்பார்! குடும்பந்தான் கோயில்
உடனே திருந்தென்பார் பார்.

குடும்பத்தில் நாளும் அமைதி இருந்தால்
நடுத்தெரு வாழ்க்கையும் இன்பந்தான் கண்ணே!
சொடுக்களவு நிம்மதியும் இல்லையென்றால்,விண்ணைத்
தொடும் வளமனையும் முள்.

சச்சரவும் சண்டையும் இல்லத்தில் உள்ளதுதான்!
பற்றி எரியவிட்டால் சிக்கிக் கருகவிட்டால்
கட்டமைப்பே பாழாகும்! உட்பகைதான் கூத்தாடும்!
சுற்றத்தைக் காப்பதற்குப் பார்.

கடவுளைத் தேடி அலைந்திடும் மக்கள்
கடமை தவறாமல் குடும்பத்தைக் காத்தால்
கடவுளே இல்லத்தைத் தேடி வருவார்!
கடவுள் அருள்கிட்டும் காண்.

மதுரை பாபாராஜ்

2 Comments:

Blogger இராஜராஜேஸ்வரி said...

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_25.html//

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தவும். நன்றி.

9:26 PM

 
Blogger parthi said...

nice really

12:11 PM

 

Post a Comment

<< Home