Thursday, December 15, 2011

உண்மைத் துறவு!
==================
காவி யுடைதரித்து, நீளமான தாடிவைத்து
மேலே சடாமுடி தொங்கிடவே காட்சிதரும்
கோலங்கள் எல்லாம் வெளியுலகம் பார்ப்பதற்கும்
போலியாக வழ்வதற்கும் தான்.

வெளிப்புறக் கோலங்கள் தேவையில்லை! என்றும்
வெளிப்படைத் தன்மையுடன் உள்புறத் தூய்மை
ஒளியில் புலனடக்கம் கொண்டேதான் பற்றை
ஒழித்தலே உண்மைத் துறவு.

0 Comments:

Post a Comment

<< Home