Sunday, December 18, 2011

குழந்தையே பல்கலைக் கழகம்!
================================
இல்லற வாழ்வில் இறைவன் குழந்தைகளை
வெள்ளைச் சிரிப்பு, குறும்புகளுடன் தந்தருள்தல்
இவ்வுலகில் பெற்றோர் பொறுமை, கடமையை
நன்குணர வேண்டுமென்று தான்.

குழந்தை வளர்ப்பில் விவேகம், தியாகம்
தளமாக நாளும் சகிக்கின்ற தன்மை,
வெளிப்படைத் தன்மை இவைபோன்ற பண்பைச்
சலிக்காமல் கற்கவைக்கும் சாற்று.

குழந்தை நலமென்றால் பெற்றோர் மகிழ்வார்!
குழந்தைக்கு நோயென்றால் பெற்றோர் துடிப்பார்!
உலகிலே இன்பமும் துன்பமும் மாறும்
நிலையுணர்த்தும் பாடம்தான் இஃது.

0 Comments:

Post a Comment

<< Home