Tuesday, December 23, 2014

ஆட்சிக்குத் தேவை
பக்குவம்!
----------------------
மதங்களைச் சார்ந்து முடிவெடுக் காமல்
நடக்கின்ற நல்லரசைப் போற்று---மதவெறியைத்
தூண்டிவிடும் பொல்லாத ஆட்சியை மக்களாட்சி
மாண்பின் எதிரியென்று தூற்று.

மதங்களுக்குள் சிக்கலைத் தோற்றுவிக்கும் போக்கு
மகத்தான ஒற்றுமைக்கு வைக்கின்ற வேட்டு!
இதமான நல்லிணக்கப் பாதையினைக் காட்டு!
அகமாசைத் தேக்காமல் நீக்கு

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home