Thursday, July 27, 2017

நிலைகுலையாதே!

மலையே விழுந்தாலும் திரும்பிப் பார்த்து
நிலைகுலை யாமல் சிறிதளவும் அஞ்சும்
சலனமற்ற உள்ளமுடன் வாழ்பவரைப் போல
உலகிலே வாழப் பழகு.

அப்படி வாழ்ந்தால்தான் உள்ளக் குமுறலின்
நெற்றியடி இன்றியே நிம்மதியாய் வாழலாம்!
எப்பொழுதும் இங்கே குமுறலுடன் வாழ்வதால்
அப்பப்பா! உன்வாழ்க்கைப் பாழ்.

0 Comments:

Post a Comment

<< Home