Friday, August 11, 2017

சூழ்நிலைக் கோலம்!

நடப்பதோ இங்கே நடக்கிறது! என்னால்
நடப்பதை ஏற்க மனமில்லை! ஆனால்
நடப்பதை வேடிக்கை பாரென்றால்  நானோ
இயங்காத பொம்மையா? இங்கு.

உணர்ச்சி துடிக்கிறதே! உள்ளத்தில் ஏதோ
இனம்புரியா வேதனை என்னை வதைத்து
மனம்பதைக்க வைக்கிறதே! என்னென்பேன்! தாயே!
தினமிந்தக் கோலந்தான் ஏன்?

உன்விதியா? என்விதியா? தங்குதடை  இல்லாமல்
தன்வழியில் வாழ்க்கைப் பயணம்
தொடர்கின்ற
பொன்னான பாதையிலே வேகத் தடைபோல
அங்கங்கே தோன்றுவதேன்? சொல்.

0 Comments:

Post a Comment

<< Home