Sunday, May 13, 2018

இன்னா நாற்பது

ஆசிரியர் கபிலர்

பாடல் 1

பந்தம் இல்லாத மனையின் வனப்பு இன்னா;
தந்தை இல்லாத  அழகு இன்னா;
அந்தணர் இல் இருந்து ஊண் இன்னா;
 ஆங்கு இன்னா,மந்திரம் வாயா விடின்.
-------------------------------------------------------------------------------
சுற்றமற்ற வீட்டின் அழகெல்லாம் துன்பந்தான்!
உற்றதுணை தந்தையற்ற மைந்தன் அழகிங்கே
எப்பொழுதும் துன்பம்! எதிர்நீச்சல் வாழ்வாகும்!
முற்றும் துறந்த துறவோரின் இல்லத்தில்
நற்றமிழே! உண்டு களிப்பதோ துன்பந்தான்!
உச்சரிக்கும் மந்திரங்கள் நன்மை தராவிடில்
எக்கணமும் துன்பந்தான் சொல்.

0 Comments:

Post a Comment

<< Home