Sunday, May 13, 2018

இன்னா நாற்பது

ஆசிரியர் கபிலர்

பாடல் 2

பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா;
ஆர்த்த மனைவி அடங்காமை நற்கு இன்னா;
பாத்து இல் புடைவை உடை இன்னா; ஆங்கு இன்னா
காப்பு ஆற்றா வேந்தன் உலகு.
---------------------------------------------------------------------------------------------
தவமேற்போர் கூடத்தில் கோழியும் நாயும்
இரைச்சலைக் கூட்டுவதால் துன்பமாகும்! இல்லாள்
அவையடக்கம்  இன்றிக்  கணவனின் சொல்லைப்
புவியிலே மீறுதல் துன்பந்தான்! மாதர்
பகுப்பற்ற  கோலப் புடவை அணிதல்
கொடுப்பது துன்பந்தான்! காப்பதற்கு வேந்தன்
உறுதுணை யற்றநாடு  துன்பந்தான்! இஃதை
நடுநிலை கொண்டுணர்ந்தால் நன்று.

0 Comments:

Post a Comment

<< Home