Wednesday, July 11, 2018

சிற்றுண்டிக்கு நன்றி!

சூடன உப்புமா சட்னி பொடிகளுடன்
ஈடற்ற இட்லியும் அல்வாவும் வெண்தயிரும்
நேசமுடன் வைத்தார் இல்லத்தார் பண்புடனே!
வேடமற்ற அன்பின் உரு.

ரசிகமணி பேரன் நடராஜன் பண்பில்
கசிந்துருகிப் பேசிக் களித்திருந்தோம் நாங்கள்!
ரசிகமணி இல்லத்தார் நல்லுறவில் இன்று
ரசித்துத் திளைத்தோம்! மகிழ்ந்தே உவந்தோம்!
நெறியாளர் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்
வசந்தா

0 Comments:

Post a Comment

<< Home