Sunday, May 13, 2018



இன்னா நாற்பது

ஆசிரியர் கபிலர்

பாடல் 5

சிறை இல் கரும்பினைக் காத்து ஓம்பல் இன்னா;
உறை சோர் பழங் கூரை சேர்ந்து ஒழுகல் இன்னா;
முறை இன்றி ஆளும் அரசு இன்னா; இன்னா,
மறை இன்றிச் செய்யும் வினை.
-------------------------------------------------------------------------------------------------------------------
காக்கின்ற வேலியின்றிக் கன்னல் பயிரினத்தைக்
காப்பது துன்பமாகும்! வான்மழை வீட்டுக்குள்
ஊற்றுமாறு கூரை இருக்கின்ற வீட்டிலே
வாழ்தலோ துன்பமாகும்! நீதி மறந்தேதான்
ஆட்சி நடந்தால் அத்தகைய ஆட்சியோ
நாட்டுக்கே துன்பமாகும்! சூழ்ச்சி வலைபின்னும்
கூட்டுச் சதிச்செயல்கள் துன்பமாகும்! மக்களைத்
தாக்கினால் துன்பமயம் நாடு.

0 Comments:

Post a Comment

<< Home