Sunday, May 13, 2018

இன்னா நாற்பது

ஆசிரியர் கபிலர்

பாடல் 3
கொடுங் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா;
நெடுநீர்ப் புணை இன்றி நீந்துதல் இன்னா;
கடு மொழியாளர் தொடர்பு இன்னா; இன்னா
,தடுமாறி வாழ்தல் உயிர்க்கு.
------------------------------------------------------------------------
கொடுங்கோல் அரசன் குடிமக்க ளாக
உறுத்தலுடன் வாழ்வது துன்பம்! தெப்பம்
உறுதுணை யாயின்றி ஆழியை நீந்தும்
படுதுணிச்சல் துன்பம்! புண்படுத்தும் வன்சொல்
தொடுப்போர் தொடர்பிங்கே துன்பம்! அலைபோல்
தடுமாறும் உள்ளம் துன்ப மயந்தான்!
தடுமாற்றம் துன்பத்தின் ஊற்று.

0 Comments:

Post a Comment

<< Home