Sunday, May 13, 2018

இன்னா நாற்பது

ஆசிரியர் கபிலர்


பாடல்: 04

எருது இல் உழவர்க்குப் போகு ஈரம் இன்னா
;கருவிகள் மாறிப் புறங்கொடுத்தல் இன்னா;
திருவுடையாரைச் செறல் இன்னா; இன்னா,
பெரு வலியார்க்கு இன்னா செயல்.
------------------------------------------------------------------------------------
எருதின்றி வாடும் உழவரிடம் உள்ள
நிலத்திலே ஈரம் இருந்தாலும் அந்த
நிலத்தால் பயனில்லை,துன்பமே! போரில்
கருவிகளை விட்டுவிட்டுத் தோல்வியால் ஓடும்
ஒருநிலை துன்பமே! செல்வந்த ரோடு
சுருக்கென்று கோபம் அடைதலோ துன்பம்!
கருத்தும் திறமையும் உள்ளவர்க்குத் தீங்கு
தருவது துன்பம் தரும்.

0 Comments:

Post a Comment

<< Home