Tuesday, November 26, 2019

பிறப்பொக்கும்?

படிப்பதற்(கு)ஆர்வம் இருந்தாலும் ஏழ்மை
படிக்க விடவில்லை! பள்ளிக்குச் சென்று
படிக்கும் குழந்தையைப் பள்ளிக்கு நானோ
உடன்சென்றே பள்ளியில் விட்டுவர வேண்டும்!
உடன்செல்வேன்! பள்ளிக் குழந்தைகள்
துள்ளும்
நடப்புகளைக் கண்டே மகிழ்வேன்! வாழ்வில்
பிறப்பொக்கும் என்றார்  வள்ளுவர்! நானும்
பிறந்தேன்! படிக்கும் குழந்தைகளும் இங்கே
பிறந்தார்கள் என்னைப்போல்! ஆனால்
பிறந்தும்
நடைமுறை ஏழ்மை எனக்கேன்?செல்வம்
தடையற்ற வாழ்க்கை அவர்களுக்கேன்?  நானோ
விடைதேடி ஏங்குகிறேன் இங்கு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home