Monday, December 09, 2019

ஊடக விவாதங்கள்!

தன்னுடைய கட்சி எதைச்செய்த போதிலும்
கண்மூடித் தனமாக நன்மைக்கே என்பார்கள்!
இங்கே எதிர்க்கட்சி எல்லோரும் ஒன்றாக
அம்மம்மா! தீமைக்கே என்பார்கள் வாதத்தில்!
சந்தடிச் சண்டைகள் போட்டவர்கள் வீடுநோக்கி
எந்தவொரு தீர்வையும் சொல்லாமல்  எல்லோரும்
வந்தவழி சென்றிடுவார்! கேட்டிருந்த மக்களும்
என்னவாதம் என்றே புலம்புவார் இங்கு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home