Sunday, March 15, 2020

மதுரை பாபாராஜ் நூல்கள் பெயர் வரிசைக் கவிதை!


மதுரை பாபாராஜ் நூல்கள் பெயர் வரிசைக் கவிதை!

கவிச்சாரல் தந்த கவியமுதம் இந்தப்
புவியில் மகர விளக்கை ஏற்று
மரபுகளின் ஓசை  அருவியாக கேட்க
மகிழம்பூ ஏந்தும் மணத்தில் கடலில்
கிளிஞ்சல்கள் பார்த்தேன்! மகரயாழ் மீட்டும்
தெளிவிலே அற்புதங்கள் கொண்ட தருவின்
நிழலில் திருக்குறள் பேழையைச் செய்தேன்!
அறம்பொருள் இன்பமென்னும் முப்பாலை வெண்பா
முறையில் கவிதை வடித்தேன்! வசந்தம்
கடைவிரிக்க பூச்சரம் தேனருவி கண்டேன்!
நடைமுறை வாழ்வியல் அந்தாதி கம்பன்
படையின் ராமா யணத்தைப் பாவால்
படைத்தேன்,!
அறத்துப்பால் இன்பத்தை ஆங்கிலத்தில்தந்தேன்!
அகங்குளிர நூல்களோ பத்தொன் பதாகும்!
பிறவியில் நான்பெற்ற பேறு.

அச்சில் வராத நூல்கள்:

அறம்பொருள் தந்தேன் குழந்தைப் பாடல்!
இன்பத்துப் பாலைப் புதுக்கவிதை தந்தேன்!
குறள்வெண்பா ராமா யணத்தைப் படைத்தேன்!
அகர வரிசை மனக்குறள் தந்தேன்!
மகத்தான பாரதிஆத் திச்சூடி படைத்தேன்!
குறளின் பொருட்பால் ஆங்கிலம் தந்தேன்!
அகத்தின் நிறைவே பா.

வெளிச்சம் தொலைக்காட்சியில் அறத்துப்பால் விளக்கம்!

வெளிச்சம் தொலைக்காட்சி வாய்ப்பாக என்னை
வெளிச்சத்தில் வள்ளுவன் வாக்கில் அறத்தை
விளக்கி குறள்கள்,பொருள்கள்,நிகழ்வு,
விளக்கத்தை ஆங்கிலத்தில் என்றே கொடுத்தேன்!
பனையூரார் பாபு அவர்களின் ஊக்கம்
முரளிக் குழுவினர்  ஒத்துழைப்பும் என்னை
முரளிக்கு அறிமுகம் செய்த குடும்ப
உறவாம் சிவகாமி சீனிவாச னும்தான்
நிகழ்ச்சியின் வெற்றிக்கு வேர்.

மதுரை பாபாராஜ்

@திரு.மதுரை பாபாராஜ் ஐயா அவர்கள்.
தாய் தமிழை சுவாசித்து, உழைப்பை உன்னதமாய் நேசித்து,
உறவுகளை பக்குவமாய் பலப்படுத்தி,
நட்பு பாராட்டுவதில் தாய் உள்ளம் படைத்தவரே, திருக்குறளை வாழ்வியலாய் கொண்டவரே,
குழந்தை செல்வங்களுக்கும் குறளமுதம் தந்தவரே,
உங்களின் நூல் படைக்கும் ஆற்றலைக் கண்டு வியந்து மகிழ்கிறோம் ஐயா. எங்கள் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். 👏👏👏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
மொகலீஸ்வரன்
விசாகை



0 Comments:

Post a Comment

<< Home