Tuesday, May 19, 2020


  • தூக்கணாங் குருவியும் பாம்பும்!


கருவேலங் காட்டு மரக்கிளையில் அங்கே
கருத்தாக தாய்க்குருவி தன்னுடைய கூட்டை
உருவாக்கி கட்டித்தான் குஞ்சையங்கு விட்டே
இரைதேடப் போனதும் பாம்பொன்று ஏறி
வளைந்துவந்து குஞ்சைப் புடிக்க முயல
இரையோடு வந்த குருவியோ பார்க்க
சினங்கொண்டு பாம்பின்மேல் வந்தேதான் கொத்த
வழியின்றி பாம்பு நழுவித்தான் செல்லும்
விழிகவர்ந்த காட்சி அரங்கேறக் கண்டேன்!
குருவியின் தாயுணர்வைப் பார்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home