Saturday, August 29, 2020

பாலாவின் சங்கச்் சுரங்கம்


 பாலாவின் 

சங்கச் சுரங்கம்

இணையப்பத்து இரண்டாம் பத்து:


கலம் சுடும் புகை


29.08.20


கலித்தொகை பாடல் வரிகளைக் கொண்டு

வழங்குகிறார் சங்கச் சுரங்கம் இரண்டாம்

உரையின் தொடக்கமாய் பாலா மொழியில்!

முழங்குகின்ற பாலாவை வாழ்த்து.


கலங்களின் பின்னணியை முன்னெடுத்துச் சொன்ன

வளமான சங்க இலக்கியப் பேச்சு

உளங்களை ஈர்த்து உரையுலாவில் ஒன்றி

மலைக்கவைத்த பாங்கினை வாழ்த்து.


எங்கெங்கே அந்தக் குயவரை எப்படி

அன்று சமுதாயம் பார்த்தது பார்வையில்

என்றே நடுநிலை யோடு உரைத்ததைக்

கண்ணெதிரே பார்த்தோம் உணர்ந்து.


கழுதை விலங்கினத்தின் பங்களிப்பு வாழ்வில்

இருந்ததைச் சான்றுடன் கொண்டுவந்து தந்தார்!

வரலாற்றை எண்ணி வியக்கின்றோம்! சங்க

இலக்கிய வாசிப்பை வாழ்த்து.


சுரங்கத்தில் இருந்து அரங்கத்திற்கு


புறநானூறு பாடல் 32


சோழன் நலங்கிள்ளி வாரி வழங்கிய

காலக் கொடைமடத்தைக் கூறுகின்ற பாடலை

மேற்கோளாய் வைத்து விளக்கினார் அற்புதமாய்!

ஈடற்ற பாலாவை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home