Thursday, September 10, 2020

பாலாவின் சங்கச்சுரங்கம்

 கவிஞர் பாலாவின் சங்கச் சுரங்கம்!


இரண்டாம் பத்து-- ஐந்தாம் உரை


நடுவு நின்ற நல்நெஞ்சினோர்!


12.09.20


உழவரின் ஊரில் இரண்டுமாடு பூட்டி

நுகத்தின் நடுவில் பகலாணி போல

நடுவுநிலை கொண்டு நல்நெஞ்சம் கொண்டே

உறுத்தலின்றி நாளும் வணிகத்தைச் செய்தார்!

நடுக்கமின்றி தானென்று செப்பு.


பட்டினப் பாலை தரும்செய்திப் பின்னணியில்

அற்புதமாய்த் தன்கருத்தை வைத்தே உரையாற்ற

கச்சிதமாய்த் தேர்ந்தெடுத்த பாலாவை வாழ்த்துவோம்!

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home