Tuesday, December 22, 2020

34 நிலையாமை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

34 நிலையாமை

குறள் 331:

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்

புல்லறி வாண்மை கடை.

எல்லாம் நிலைத்தவை என்றே நினைக்கின்ற

பொல்லா அறியாமையே கேடு.

குறள் 332:

கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்

போக்கும் அருவிளிந் தற்று.

கூட்டம் திரள்வதுபோல் செல்வங்கள் சேர்கிறது!

கூட்டம் கலைவதுபோல் சேர்ந்த வளமனைத்தும்

காற்றாய் மறைந்துவிடும் காண்.

குறள் 333:

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்

அற்குப ஆங்கே செயல்.

சற்றும் நிலையற்ற செல்வங்கள் உள்ளபோதே

முற்றும் அறம்செய் நிலைத்து.

குறள் 334:

நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்

வாள துணர்வார்ப் பெறின்.

நாளெனில் வாழ்நாள் தனைக்குறைக்க

வெட்டுகின்ற

வாளாகும் இங்கென் றுணர்.

குறள் 335:

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை

மேற்சென்று செய்யாப் படும்.

வாழ்விலே விக்கி உயிர்போகும் முன்னமே

சோர்வின்றி  நல்லறம் செய்.

குறள் 336:

நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை யுடைத்திவ் வுலகு.

பெருமையுடன் நேற்றுவாழ்ந்தோர் இன்றில்லை என்ற

நிலையாமை கொண்டதிவ் வாழ்வு.

குறள் 337:

ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப

கோடியு மல்ல பல.

கரையும் குமிழிதான் வாழ்வென் றுணரார்

அலைகின்றார் கோடியாசை கொண்டு.

குறள் 338:

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே

உடம்போ டுயிரிடை நட்பு.

உடலுடன் நம்முயிர் நட்பென்பது முட்டை

கிடக்கப் பறக்கும்புள் போல்.

குறள் 339:

உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி

விழிப்பது போலும் பிறப்பு.

உறங்குவது போன்றதே சாவு! உறக்கம்

கடந்து விழித்தல் பிறப்பு.

குறள் 340:

புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள்

துச்சி லிருந்த உயிர்க்கு.

ஒட்டி உடம்புடன் வாழ்ந்த உயிருக்கு

வேறிடம்

கிட்டவில்லை யோஇங்கு? சொல்.


மதுரை பாபாராஜ்

    

































0 Comments:

Post a Comment

<< Home