Friday, December 18, 2020

முடி முடி முடி

 முடிக்கு முடிவே இல்லை!


தலைமுடியோ நாளும் வளரும்! உதிரும்!

நிலையற்ற அந்த முடிகுறித்து நாளும்

அலையும் மனத்தில் கவலைகள் சூழ

அலைகின்றார் வண்ணக் கலவையைத் தேடி!

குலையடித்தே ஊடகத்தில் காட்டுகின்றார் அம்மா!

விளம்பரங்கள் இங்கே நொடிக்கு நூறு!

பளபளப்பை நம்பிப் பறக்கின்றார் நாடி!

கடைகடையாய் ஏறி இறங்குகின்றார் மக்கள்!

படையெடுப்பார் நாளும் அழகு நிலையக்

கடைகளுக்கே! ஆனால் முடியோ நகைக்கும்

அகத்திற்குள் இக்கவலை பார்த்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home