Tuesday, October 05, 2021

குறள் 881


குறள் 881


நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்

இன்னாவாம் இன்னா செயினென்றார் அய்யன்!

நிழல்போன்றோர்  வாழ்விலே மாறி நடந்தால்

நலமளிக்கும்  நீர்போன்றோர் வஞ்சகம் செய்தால்

அகத்திலே நிம்மதி தேயும் மறைந்து!

புதைகுழியில் சிக்கியதேன் வாழ்வு?

மதுரை பாபாராஜ்

குறளின்பொருள்:

இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும்கூடக் கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும். அது போலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையும் ஆகும்


 

0 Comments:

Post a Comment

<< Home