Monday, November 29, 2021

உன்னகமே நிம்மதி!


வணக்கம் நண்பரே!


நண்பர் IG சேகர் அனுப்பிய காலை வணக்கம் படம்!


பறவையே! இன்றைய கவிதை!


உன்னகமே நிம்மதி!


நிம்மதியைத் தேடி அலைகின்றாய்! தேடுகின்ற

நிம்மதி உன்னிடமே உள்ளதைக் கண்டுகொள்!

உன்னகத்தில் உள்ளதை ஏன்புறத்தில் தேடுகின்றாய்?

உன்னகமே நிம்மதியின் கூடு.


மதுரை பாபாராஜ்

நொடிப் பொழுதில்

     கவி புனையும்

மடி இல்லா

     மா கவியே!

தேடி உன்னை 

     நித்தம் வரும்

நாடி உன்னை 

     நாளும் வரும்

நற் கருத்தை

     வாழ்த்தி வரும்

ஓவியத்தின் உட்பொருளை

     உட் கொண்டு

பா தொடுத்து

     பா மாலையாய்

பாமரரும் புரியும்படி

     பாரெங்கும் பரவசமாய்

பாங்குடனே பகிர்ந்தளித்து

     பரவசத்தில் ஆழ்த்தும்

ஆற்றலை ஆராதித்து

     மதுரகவி பாபாவை

கவிராயர் அய்யாவை

     கைகூப்பி வணங்குகிறேன்!

தலைதாழ்த்தி வாழ்த்துகிறேன்!

     பார்போற்ற வாழ்கவென்று!


இமயவரம்பன்


நண்பர் இமயவரம்பனுக்கு நன்றி!


வான்மழையை விஞ்சுகின்ற தேன்மழை பாழையாய்

வாழ்த்து மழையை இமய வரம்பன்தான்

ஆழ்மன நட்புடன் தந்தார் மகிழ்ந்தேதான்!

வாழ்வாங்கு வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

vovRamasamy:

மடி இல்லா மாகவி! 200% உண்மை

👍👍👍


VOVCR:

நல்லன எல்லா திசைகளிலிருந்தும் வரட்டும்.

உங்களைப் பற்றிய நண்பர் இமயவரம்பன் பதிவு முற்றிலும் உண்மை..

பெரியகுளம் இராமசாமி ஐயாவும் இதே கருத்தை உடையவர்..

பாபா... பா புனைவதில் பாயும் புலி 🐯 😁👍😊🙏💐

 

0 Comments:

Post a Comment

<< Home