Monday, June 05, 2023

சாமிநாதன் ஐயாவுக்கு நன்றி

 Swaminthan Swaminathan:

குறளுக்கு குறள் வடிவில் விளக்கம்!
அழகுக்கு அழகு சேர்க்கிறது!
அறத்திற்குப் பொருளும்,
இன்பத்தை வீட்டிற்கு வீடும்
கொண்டு வந்து சேர்க்கிறது!

தாத்தாவின் சொத்துக்களைப் பேரன்கள் பாதுகாப்பதோடு,
புதுப் பொலிவும், புதுமை எழிலும் ஊட்டுவது உள்ளத்தில் கள்வெறி செய்கிறது!
தமிழ் என்றும் வாழும்!
இறை போல!-- சுபசு.

மதுரை பாபாராஜ் ஐயா!
தமிழ் போல் வாழ்க.

சாமிநாதன் சாமிநாதன்
SS


மிக்க நன்றி ஐயா.

சாமிநாதன் ஐயாவின் வாழ்த்தெனக்கோ ஊக்கமாகும்!
தேனமுதம் உண்ட நிலையடைந்தேன் நானின்று!
வான்மழை போல்வாழ்க நீடு.

மதுரை பாபாராஜ்

குறளுக்கு குறள் வடிவம் தந்த ஐயா பாபாராஜின்
பணி பெரும் பாராட்டிற்குரியது. மு.வ உரையின் சிறப்பு போல்
பாபாவின் பாட்டுரையும் சிறப்பே.

எத்தகைய கடினமான சங்கப் பாடல்களையும் எளிமையான பாடலாக்கித் தருவதில் அவருக்கு ஒப்பாக யாருமிலை.

பாபா என்றாலே எளிய கவி
வடிவம் எனலாம்.

தென்.கி

0 Comments:

Post a Comment

<< Home