Wednesday, January 23, 2008

மகிழ்ச்சியாய் வாழ்வோம்

இருப்பதோ இங்கே சிலநாள்கள் தானே!
கருத்துமோதல் கொண்டு கனன்றே--இருக்கும்
சிலகாலந் தன்னைச் சிதைத்துச் சினந்து
கலக்கமுடன் வாழ்வதேன் சாற்று?

மகிழ்ச்சியாய் வாழ்வதற்கே வாழ்க்கை!கிடைக்கும்
மகிழ்ச்சியை சீர்குலைக்கும் போக்கை--அகத்தில்
களையாய் வளரவிட்டு வேடிக்கை பார்த்தால்
உளைச்சலே மிஞ்சும் உணர்

0 Comments:

Post a Comment

<< Home