Friday, January 18, 2008

சமச்சீர் கல்வி!

அனைவருக்கும் நல்ல தரமான கல்வி
முனைப்பாக வந்தாக வேண்டும்--மணக்கும்
சமத்துவம் மக்களாட்சி தத்துவம் என்றும்
கமழவைக்கும் இக்கல்வி காண்.

மாணவன் ஏழையா?இல்லை செல்வனா?
ஊனமடா இக்கேள்வி!பள்ளியில்--தேன்தான்
சமச்சீர் முறைக்கல்வி!இங்கே திறமை
அமைக்கும் அளவுகோல் தான்.

0 Comments:

Post a Comment

<< Home