Wednesday, November 26, 2008

ட்ராய் நகர் ஹெலன்

எழில்சிந்தும் இம்முகமா வேகங்கொண்டு
எண்ணற்றக் கப்பல்கள் படையெடுத்து
இலியத்தின் விண்முட்டும் மாளிகைகள்
எரிந்துவிழக் காரணமாய் இருந்ததன்று?
பொலிவூட்டும் ஓவியமே!ஹெலேனே!எந்தன்
புத்துயிரோ நிலைப்பதற்கு முத்தம் சிந்து!
சிலிர்ப்பூட்டும் அவளிதழ்கள் அந்தோ! எந்தன்
செந்தேனாம் உயிர்தன்னை உறிஞ்சு தம்மா!

பாரம்மா! அதுவெங்கே பறக்கு தென்று?
பைங்கிளியே! ஹெலேனேநீ வாராய்!வாராய்!
சீரசையும் கவியமுதே !மீண்டும் எந்தன்
சீரான உயிர்தன்னைத் தாராய் ! தாராய்!
தாரணியில் நானிங்கே வாழ்வேனம்மா !
தளிர்க்கொடியுன் இதழ்களிலே நானோ இன்பத்
தேரசையும் சொர்க்கத்தை உணருகின்றேன்!
சேயிழையே!வேறொன்றும் எனக்கு வேண்டாம்!

(TRANSLATION OF CHRISTOPHER MARLOW POEM)

--- மதுரை பாபாராஜ்
1985

0 Comments:

Post a Comment

<< Home