Monday, November 24, 2008

நல்ல பண்புகளைக் கடைப்பிடிப்போம்

அறத்தைச் சிந்தும் சொற்களையே
அகத்தில் ஏந்திச் சொல்லுங்கள்!
மறந்தும் துரோக மகுடிக்கு
மயங்க வேண்டாம் வெல்லுங்கள்!

பறக்கும் பொய்மை வல்லூறைப்
பாய்ந்து பிடித்தே திருத்துங்கள்!
சிறக்க வைக்கும் வாயமைக்குச்
சிரத்தைத் தாழ்த்தி நில்லுங்கள்!

அன்னை தந்தை ஆசானை
அகத்தில் வைத்துப் போற்றுங்கள்!
தன்னை வைத்து எடைபோடும்
தன்ன லத்தை மாற்றுங்கள்!

என்றும் இங்கே தமிழ்விளக்கை
இல்லந் தோறும் ஏற்றுங்கள்!
பொன்னும் மணியும் இன்பமென்று
போற்றும் மனதைத் தூற்றுங்கள்!

-- மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home