Monday, November 24, 2008

காகிதமும் பளுவாகும்!

மால்கடலில் உருவாக்கும் அலைகள் போல
மலைபோலச் சிக்கல்கள் தோன்றித் தோன்றிச்
சூல்கொண்டு சுழன்றாடிக் கவ்வும் போது
சூழ்ந்தேதான் வேதனைகள் அணிவகுக்கும் !
கால்களுக்கு வலுவிருக்கும் இளமை நாளில்
காற்றுடனும் போர்புரிந்து துணிந்து நிற்போம்!
கால்களிங்கே தள்ளாடும் முதுமை நாளில்
காகிதமும் பளுவாகும்! கூனி நிற்போம்!

--- மதுரை பாபாராஜ்
1985

0 Comments:

Post a Comment

<< Home