Monday, November 24, 2008

மாமியார் மருமகள் சண்டை

வாழையடி வாழையாக வந்த விந்தை !
மாமியாரும் மருமகளும் போடும் சண்டை!
காளையரை இடையினிலே மாட்ட வைத்து
கமண்டலத்தை நாடவைக்கும் உரிமைச் சண்டை!
வேளையிது ! மருமகளாய் விளங்கி நிற்கும்
மங்கையரே! மாமியாராய் மாறும் அந்த
நாளையிலே புதுப்போக்கை ஏற்படுத்தி
நல்லமைதி உருவாகச் சூளுரைப்பீர்!

மதுரை பாபாராஜ்
1985

0 Comments:

Post a Comment

<< Home