Monday, November 24, 2008

வளர்பிறை மனிதர்க்கில்லை

தேய்பிறைகள் வந்தாலும் நிலவே ! உன்றன்
தேகத்தில் வளர்பிறைதான் படர்ந்து நிற்கும்!
சேய்ப்பருவம் முதலாகப் பருவம் மாறும்
தேகத்தில் வளர்பிறைதான் என்ற போதும்
தேய்பிறைதான் வளர்பிறைகள் எங்க ளுக்கு!
தேய்ந்துவிடும் பருவங்கள் வளர்வ தில்லை!
தேய்பிறையும் வளர்பிறையும் மாறி மாறித்
தெரிவது உனக்குத்தான்! மனிதர்க் கில்லை!

-- மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home