Friday, October 23, 2009

திருமா கருத்தின் மெய்ப்பொருள் காண்போம்!

இலங்கைச் சிக்கல்
===================
திருமா கருத்தின் மெய்ப்பொருள் காண்போம்!
==============================================
தமிழர்கள் கூட்டம் தனித்தனி யாக
அமைப்புகள் வைத்தே பிரிந்து கிடக்கும்
தமிழினமாய் மாறினால் ஒற்றுமை என்னும்
கனியைக் கொய்வதுதான் என்று?

நன்கு பசுக்களும் ஒன்றாய் இருந்தன!
கானகச் சிங்கமோ தாக்க முடியவில்லை!
நான்கும் தனித்தனி யாகப் பிரிந்தன!
நான்கும் மடிந்தன! பார்.

இருக்கும் அமைப்புகள் எல்லாம் இலங்கைத்
திருநாட்டில் ஒற்றுமையைக் காட்டினால் போதும்!
ஒருங்கிணையும் சக்திக்கு முன்னே அனைத்தும்
துரும்பாகும்!உண்மை உணர்.

திருமா வளவனின் உள்ளம் உணர்த்தும்
கருத்தின் வலுவான உண்மையைப் போற்று!
அருமைத் தமிழினமே! ஒற்றுமைதான் சக்தி!
ஒருமையும் ஒற்றுமையும் வேர்.

காந்தி தலைமையில் ஒன்றானார் இந்தியர்கள்!
ஆங்கிலேய ஆதிக்கம் வேரிழந்து சாய்ந்தது!
ஓங்குகின்ற ஒற்றுமையில் ஓரணியாய் மாறிவிட்டால்
வான்முட்டும் வெற்றியுண்டு! செப்பு.

--மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home