Monday, October 26, 2009

விதிவளையம் !

==================
இப்படிச் செய்திருந்தால் சாவைத் தவிர்த்திருப்பார்!
அப்படிச் செய்திருந்தால் சாவைத் தவிர்த்திருப்பார்!
உற்றார் உறவினர்கள் கூடி முணுமுணுப்பார்!
சுற்றம் தலையசைக்கும் சூழ்ந்து.

எப்படிக் காத்திருந்த போதும் விதிவளையம்
சுற்றி வளைத்திட்டால் தப்ப முடியாது!
எப்பொழுது எங்கெங்கே எப்படிச் சாகவேண்டும்
அப்படிப் போய்விடுவார் பார்.

பிறப்பதற்கு வாய்ப்பின்றிப் போனாலும் போகும்!
பிறந்தவர்கள் இவ்வுலகில் நாளும் நிலைத்தே
இறக்காமல் வாழ்கின்ற வாய்ப்பில்லை கண்ணே!
இறப்பது நிச்சயம் இங்கு.

--மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home