Saturday, October 31, 2009

சிதைந்த குடியிருப்பு!சிதையாத நினைவுகள்!

===============================================
அப்பாவும் அம்மாவும் அண்ணனும் தம்பியும்
அக்காவும் தங்கையும் கூடி உறவாடி
அக்கால வாழ்வில் மகிழ்ந்து களித்திருந்தோம்
அக்கோலம் இன்பந்தான் பார்.

ஆண்டுகள் ஓடின! மாற்றங்கள் வந்தன!
கூண்டிலே வாழ்ந்த பறவைகள் திக்கொன்றாய்
கூண்டு திறந்திட வெவ்வேறு ஊர்களின்
கூண்டுகளில் வாழ்ந்துவந்தார் காண்.

வாழ்ந்திருந்த வீட்டை மறுபடியும் பார்ப்பதற்கு
காலம் கனிந்தது! ஆசையுடன் ஓடினாள்!
கோலத்தைப் பார்த்தாள்!குமுறி அழுதுவிட்டாள்!
காலமாற்றம் என்றாள் தவித்து.

தொடர்வண்டி ஓட தடமமைக்கும் வேலை
நடந்ததால் அவளோ எதிர்பார்த்து வந்த
தடங்களெல்லாம் சீரழிக்கப் பட்ட நிலையைத்
துயரமுடன் பார்த்தாள் துடித்து.

அன்றுவாழ்ந்த அந்தக் குடியிருப்பும் சூழ்நிலையும்
இன்றில்லை!இங்கே சிதைந்தன!ஆனாலும்
தன்நெஞ்ச எண்ணங்கள் இன்னும் சிதையவில்லை!
என்றுகாண்பாள்?ஏங்கினாள் பார்த்து.

-- மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home