Sunday, November 08, 2009

என்று முடியும் துயர்?

என்று முடியும் துயர்?
=======================
இலங்கைக் கடற்படையைச் சேர்ந்தவர்கள் நாளும்
வலம்வந்தே இந்திய மீனவரைத் தாக்கி
அலைக்கழிக்கும் போக்கைத் தடுத்து நிறுத்தும்
நிலையென்று காண்போம்? உரை.

எங்கெங்கோ சென்றானாம்! வெற்றிக் கொடிநாட்டி
மண்ணுலகை ஆண்டானாம்!ஏட்டுச் சுரைக்காய்கள்
கண்களை ஈர்க்கும்! கறிசமைக்க ஏலாது!
அந்தஇனமோ பார்வையாளர் இன்று!

கண்டனம்!போராட்டம்!ஆர்ப்பாட்டம்! என்றேதான்
துன்பத்தைப் பங்குபோட்டுக் கத்தினாலும் மீனவர்கள்
அன்றாடம் தாக்கப் படுவதோ நிற்கவில்லை!
என்று முடியும் துயர்?

மீனவர்கள் என்ன குருவிகளா?கொக்குகளா?
மீனவரைச் சுட்டும் கைதுசெய்தும் வாட்டுகின்ற
ஈனமனங் கொண்ட இலங்கைக் கடற்படை
ஆணவத்தை யாரழிப்பார்? கூறு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home