Wednesday, November 11, 2009

சேராது புண்ணியம் !

===========================
எந்தக் கடவுளைக் கும்பிட்ட போதிலும்
இந்த மனிதன் அடிப்படைப் பண்புகளில்
கொஞ்சமும் மாறவில்லை! தன்னலக் கூட்டுக்குள்
தஞ்சம் அடைகின்றான் சாற்று.

விட்டுக் கொடுக்கும் விவேக மனப்பான்மை,
சுற்றம் தழைக்கும் மனிதநேயம்,இன்சொற்கள்
ஒட்டி உறவாடும் பண்பின் அணுகுமுறை
பற்றிப் படரவேண்டும் பார்.

பொய்மை,பொறாமை,பேராசை,வன்சொற்கள்
கயமை,கடுமை,முகத்திலே சீற்றம்,
நயவஞ் சகஎண்ணம்,காழ்ப்புணர்ச்சி போன்ற
தளங்கள் அழியவேண்டும்!சொல்.

கோயிலுக்கு கோயில் வழிபாடு செய்துவிட்டு
கோயிலை விட்டே வெளிவந்து நின்றுகொண்டு
வேரறுக்கும் வேலைகளைச் செய்வதுதான் பக்தியா?
சேராது புண்ணியங்கள்!செப்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home