Saturday, November 14, 2009

சமுதாய வீதியில்

===================
பெண்களின் மாராப்பு சற்றே விலகியதும்
பண்புடன் கையால் சரிசெய்வார் அன்றுதான்!
என்னதான் மாராப்பு எப்படித்தான் போனாலும்
கண்டுகொள்வ தில்லையே இன்று!

பெண்களில் எல்லோரும் இப்படியல்ல என்றபோதும்
கண்டுகொள்ளாப் பெண்களும் இவ்வகையில் உள்ளனர்!
என்றுமே பார்த்து நடந்துகொண்டால் பாதுகாப்பு
என்றென்றும் பெண்களுக்கே!சொல்.

வாகனத்தில் பெண்களும் செல்கின்ற காலமிது!
வேகமாகப் போகின்றார்!மேலாடை காற்றினில்
ஊடறுத்தே இங்கே பறக்கின்ற காட்சியில்
நாடே அதிர்கிறது கண்டு.

வண்டியில் சென்றாலும் கைபேசி காதுகளில்
முண்டி உறவாட மெய்மறந்து பேசுகின்றார்!
வண்டியை ஓரமாய் நன்கு நிறுத்திவிட்டு
வம்பளந்தால் பாதுகாப்பு!சொல்.

கணவரோ, காதலரோ கட்டிப் பிடித்தே
இணக்கமுடன் வண்டியில் செல்கின்றார்!அம்மா!
தொணதொண வென்றேதான் பேசுகின்றார்!இந்தக்
குணமோ விபத்தைத் தரும்.

கண்ட இடங்களில் காறி உமிழ்கின்றார்!
என்னப் பழக்கமோ இப்பழக்கம்?மாந்தரே!
எண்ணற்ற நோய்களை ஊற்றெடுக்கச் செய்கின்ற
பண்பற்ற இப்போக்கை மாற்று.

அங்கங்கே நின்று புகைபிடிக்கும் ஆண்களே!
உங்களால் இங்கே துயரந்தான் மற்றவர்க்கு!
இன்பமென்று எண்ணி உடல்நலத்தைச் சீரழிக்கும்
வன்முறையை இன்றே நிறுத்து.

நற்பண்பை நாளும் கடைப்பிடித்தல் நாகரிகம்!
அற்பக் குணத்தை வளர்ப்பதல்ல நாகரிகம்!
முற்போக்கில் செல்கின்றோம் என்றே நினைத்தேதான்
பிற்போக்கில் வாழாதே இங்கு.

மதுரை பாபாராஜ்

1 Comments:

Blogger style-sha said...

Excellent. I too want to write like this. visit my developing blog wow.idea-boss.com/blogtamil and say your views. your samudhayaya veedhiyilae is mind blowing. this is the same subject i was thinking to write for a long time..

7:05 AM

 

Post a Comment

<< Home