Wednesday, November 11, 2009

எந்தத் துணையும் நிலையில்லை!

=================================
கணவன் இறந்ததும் அவ்வளவு தானா?
மனத்தளவில் பாதிப்பும் ஏக்கமும் உண்டு!
குணவதியே!சந்தித்து நம்பிக்கை ஏந்து!
சுணங்காதே!உன்கையில் வாழ்வு!

பறவை,விலங்கினங்கள்,நீரினங்கள் எல்லாம்
இடங்கண்டு வாழ முடிகிறதே! உன்னை
முடக்காதே!போராடு!முன்னேறு!உன்னைத்
தொடர்ந்துவரும் வெற்றிகளைப் பார்.

தனிமை கொடுமைதான்!ஆனால் கடமை
அணிவகுத்து நிற்கிறதே!உன்னையே நம்பி
மணியான பிள்ளை ஒருவன் அந்தோ!
துணிந்துநில் சான்றோனாய் மாற்று.

வளர்ந்தான்!படித்தான்!படித்து முடித்தான்!
வளமான வேலை கிடைத்தது!உந்தன்
நிலையும் மாறும்!மகனை நிமிர்த்து!
கலைந்திடும் காட்சிப் பிழை.

கணவன்,மனைவி இறத்தல் இயல்பு!
கணவனை எண்ணிக் கடமை செய்து
தினந்தோறும் வாழவேண்டும் இல்லாள்!துயரம்
மனச்சுமைதான்!தாங்கவேண்டும் இங்கு.

மனைவியை எண்ணிக் கணவனும் நித்தம்
அனைத்துக் கடமையைச் செய்திட வேண்டும்!
மனையில் அனைவரும் வாழ்ந்திட வேண்டும்!
அனைத்தையும் தாங்கவேண்டும் இங்கு.

எவரை இழந்தாலும் வாழ்க்கை நகரும்!
எவரும் எவரையும் சார்ந்ததல்ல வாழ்க்கை!
அவரவர்க்கு வாழ்க்கை உறுதியாய் உண்டு!
தவறாமல் நேர்வழியில் வாழ்.

மதுரை பாபாராஜ்

1 Comments:

Blogger Learn said...

அருமையாக உள்ளது கவி வரிகள், வாழ்த்துக்கள்

9:55 PM

 

Post a Comment

<< Home