Friday, December 26, 2014

எல்லையை உணர்!
--------------------------
கடன்வாங்கும் நேரம் இருக்கின்ற வேகம்
கடனைத் திருப்பித் தருகின்ற
நேரம்
கடன்வாங்கி யோர்க்கோ இருப்பதே இல்லை!
நடைமுறையில் இப்படித்தான் பார்.

நாட்டின் நடப்பில் வகைதொகை இல்லாமல்
தூக்கித் தருகின்றார் நாளும் கடன்களைத்தான்!
மீட்ட முடியாமல் சிக்கித் திணறுகின்றார்
நாட்டில் அனைவருந் தான்.

நம்மால் தரமுடியும் என்றநம் எல்லைக்குள்
சிந்தித்து தேவைக்கேற் றாற்போல் கடன்வாங்கி
சொன்னசொல்லைக் காத்துப் பகைதவிர்த்து வாழவேண்டும்!
அன்பை முறிக்கும் கடன்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home