Saturday, December 27, 2014

புத்தாண்டே வா!
புதுப்பொலிவைத் தா!
   (2015)
------------------------------------------------------------------------
அனைத்துமத நல்லிணக்கம்
 அன்றாடம் தழைக்கவேண்டும்!
மனைதோறும் மக்களிங்கே
 மகிழ்ச்சியாக வாழவேண்டும்!

தனிமனித நல்லொழுக்கம்
 தலைநிமிர வைக்கவேண்டும்!
மனிதநேயச் சிந்தனைகள்
 வடிவத்தைப் பெறவேண்டும்!

வல்லரசாய் நம்நாடு
 வையகத்தில் உயரவேண்டும்!
பொல்லாத வன்முறைகள்
 வேரிழந்து போகவேண்டும்!

அரும்புகின்ற புத்தாண்டே!
 அகமாசை அகற்றிவிடு!
விரும்புகின்ற இவையெல்லாம்
 விருட்சமாக அருள்புரிவாய்!

0 Comments:

Post a Comment

<< Home