Wednesday, January 06, 2021

61 மடியின்மை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

61 மடியின்மை

( சோம்பல் இல்லாமை)

குறள் 601:

குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்

மாசூர மாய்ந்து கெடும்.


பேரொளி கொண்ட குடிப்பெருமை 

சோம்பலால்

காரிருள் சூழ்ந்து கெடும்.

குறள் 602:

மடியை மடியா ஒழுகல் குடியைக்

குடியாக வேண்டு பவர்.


குடும்பம் உயர்ந்திட சோம்பலின்றி ஊக்கம்

தொடுத்தே முயல்தல் சிறப்பு.

 குறள் 603:

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த

குடிமடியுந் தன்னினு முந்து.


அறிவின்றி அக்கறையும் இல்லாமல் வாழ்ந்தால்

குடியழியும் சோம்பேறி முன்.

குறள் 604:

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து

மாண்ட உஞற்றி லவர்க்கு.


சோம்பேறி வாழ்விலே குற்றம் பெருகும்!

சீரழிந்தே

தாழும் குடியின் புகழ்.

குறள் 605:

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன்.


காலத்தைத் தாழ்த்தல்,மறதியுடன் சோம்பலும்  தூக்கமென்ற

நாலும் அழிவின் படகு.

குறள் 606:

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்

மாண்பயன் எய்தல் அரிது.


சான்றோர் தொடர்பிருந்தும் சோம்பலே

வாழ்வானால்

காண்பாரோ நற்பெருமை இங்கு?

குறள் 607:

இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து

மாண்ட உஞற்றி லவர்.


முயற்சியின்றி சோம்பி அலைந்திருந்தால் நாளும்

இகழ்ச்சிக்கே ஆளாவார் சொல்.

குறள் 608:

மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னென்னார்க்

கடிமை புகுத்தி விடும்.


குடும்பத் தலைவனோ சோம்பித் திரிந்தால்

பகைவர்க் கடிமைதான் கூறு.

குறள் 609:

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்

மடியாண்மை மாற்றக் கெடும்.


சோம்பலை விட்டுவிட்டால் வாழ்க்கை

குறைபாடு

நீங்கி நிறைவாகும் சொல்.

குறள் 610:

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

தாஅய தெல்லாம் ஒருங்கு.


சோம்பலற்ற மன்னன் உலகளந்து தன்கொடைக்கீழ்

ஆள்வது போல்பயனாம் சொல்.
















  















0 Comments:

Post a Comment

<< Home