Sunday, February 07, 2021

நூலோடு உறவாடு


 நிகழ்ச்சி அமைப்பு

கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம்

கருநாடகத் தமிழ்ப்பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கம்


நூலோடு உறவாடு !


07.02.21


குறள் இனிது!

நூலாசிரியர்

தமிழ்ச்செம்மல் சோம.வீரப்பன்


சிங்கத்துடன் நடப்பது எப்படி?


தமிழ்நெஞ்சங்கள் கூடிப் பொழிந்த

அமைப்பின்

குறள்மழை காவிரி வீரப்பன் நூலை

நிறைவாக மக்களிடம் கொண்டுசேர்த்த

ஆர்வச்

சிறப்பை மனமுவந்தே வாழ்த்து.


வள்ளுவர் குடும்ப நெறியாளர் :

சி.இராஜேந்திரன் IRS


திருக்குறள் சிங்கம் இராசேந்ரன் இன்று

குறளினிது நூலின் குறள்நுணுக்கந் தன்னைச்

சிறப்பாகப் பேச்சில் எடுத்துரைத்தார் வாழ்த்து!

குறள்போல வாழ்கபல் லாண்டு.


வீறுநடை போடவைத்தார் வீரப்பன் நம்குறளை

பேறுபெற்றோர் இந்நூலைப் படித்தோர்கள் பார்த்தோர்கள்

சாறு பிழிந்து கொடுத்துள்ளார் நிர்வாகக்

கூறுகளை ஆளுமை யோடு


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home