Sunday, October 10, 2021

இந்தநாள் இனியநாள்!


இந்தநாள் இனியநாள்!

அய்யா பாபாவின்

பிறந்தநாள்!

கடலின் அலைபோல

கவிதை மழைபொழியும்

ஆற்றல் அதிகம்கொண்ட

படத்தைப் பார்த்தாலும்

பிறமொழியில் இருந்தாலும்

ஓவியமோ காவியமோ

கருத்தை புரிந்துகொண்டு

கனிச்சாறாய் கவிதைகொண்டு

ஆறிலிருந்து அனைவரும் 

அறியும் வண்ணம்

கருத்தை கவனமாக

எடுத்துரைக்கும் பாவலரை

பாவாணர் பாபாவை

பல்லாண்டு வாழ்ந்து 

பலகவிதை தந்து

வாழ்வாங்கு வாழ 

நெஞ்சினிக்க வாழ்த்துகிறேன்!

💐🙏🌷🙏🌹🙏🌺🙏🌸🙏

இமயவரம்பன்

 

0 Comments:

Post a Comment

<< Home